Sangathy
News

வடமராட்சி கிழக்கில் தனியாரின் ஒன்றரை பரப்பு காணியை கடற்படையினருக்காக சுவீகரிக்கும் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்றும் தடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு –  உடுத்துறை 10 ஆம் வட்டாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கையே இன்று முன்னெடுக்கப்படவிருந்தது.

குறித்த பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில்  15 பேர்ச் அளவில்  கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்படை முகாம் அமைந்திருக்கும் ஒன்றரை பரப்பு காணியை கடற்படையினருக்கு நிரந்தரமாகவே சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிக்காக அரச நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் சென்றிருந்தனர்.

காணி உரிமையாளர்,  மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள் இணைந்து எதிர்ப்பினை வௌிப்படுத்தியதையடுத்து, காணி அளவீட்டினை அதிகாரிகள் தற்காலிகமாக இடைநிறுத்திச் சென்றுள்ளனர்.

இதன்போது, பிரதேச மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் உள்ளிட்ட பலரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.

Related posts

Bosnia Muslims remember Srebrenica massacre, worst atrocity on European soil since WWII

Lincoln

Stay at home next weekend and support Dengue control program – State Minister of Health

Lincoln

Speaker appoints PSC to probe country’s bankruptcy

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy