Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தரக் குறைபாடு காரணமாக 65 மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவற்றில் இந்திய கடனுதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தொன்றும் அடங்குவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 6 மருந்துகளும் தரக் குறைபாடு காரணமாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment.