Sangathy
News

3 மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

Colombo (News 1st) தொடரும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

காலி மாவட்டத்தின் யக்கமுல்ல, எல்பிட்டிய, நாகொட, இமதுவ, காலி கடவத் சதர பிரதேச செயலக பிரிவுகள்

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, வலல்லாவிட்ட, மத்துகம பிரதேச செயலக பிரிவுகள்

மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, ஹக்மன ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பதுளை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

U.S. Ambassador to UN Agencies in Rome Cindy McCain to visit Lanka

Lincoln

Army to be trimmed to 135,000 personnel by 2024

Lincoln

குற்றப்புலனாய்வு திணைக்கள மலசலகூடத்திற்குள் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy