Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நிர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 8 மணி வரை 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அம்பத்தலை நீர் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment.