
அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய 10 TH-57 ‘Sea Ranger’ உலங்குவானூர்திகள் இலங்கை விமானப்படைக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.
இன்று (23) மாலை இரத்மலானை விமானப்படைத் தளத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது
இந்த உலங்குவானூர்கள் மூலம் முதன்மையாக விமானி பயிற்சி, மனிதாபிமான உதவிகள், பேரிடர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் பிற பொதுச் சேவைப் பொறுப்புகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த உதவிக்கு இலங்கை மற்றும் அமெரிக்கா இடையேயான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கிய மைல்கல்லாக கருதப்படுவதுடன், இதற்காக அமெரிக்க அரசு மற்றும் அமெரிக்க கடற்படைக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
