Colombo (News 1st) ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடமிருந்து விசா கட்டணத்தை அறவிடாமலிருக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here