வெளவால்களுக்கு புதிய கொரோனா தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வெளவால்களிடம் புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பதை தாய்​லாந்து விஞ்​ஞானிகள் கண்​டுபிடித்​துள்​ளனர். இதுகுறித்​து, ‘செல்’ என்ற மருத்​துவ இதழில் வெளி​யான கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

தாய்​லாந்​தில் உள்ள வெளவால்களிடம் கண்​டறியப்​பட்​டுள்ள புதிய வைரஸ், மனிதர்​களைத் தொற்​றும் ஆற்​றலைக் கொண்​டிருக்​கலாம். இந்த வைரஸ் மக்​களிடையே பரவி வரு​வதற்​கான ஆதா​ரம் இல்​லை. ஆனாலும், விலங்​கு​களிடம் பரவும் வைரஸ்​களை கண்​காணிப்​பது முக்​கி​யம்.

இந்த ஆய்​வில், வைரஸ் ஏ.சி.இ.2 என்ற மனித உயிரணு புரதங்​களு​டன் இணை​யக் கூடும் என்று ஆராய்ச்​சி​யாளர்​கள் கவனித்​துள்​ளனர்.

இதன் பொருள் ஒரு பெருந்​தொற்று உடனடி​யாக ஏற்​படும் என்​ப​தல்ல, மாறாக இது விலங்​கு​களிடம் இருந்து மனிதர்​களுக்​குப் பரவக்​கூடிய வாய்ப்பு இருப்​ப​தைக் காட்​டு​கிறது. இவ்​வாறு கட்டுரையில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles