Colombo (News 1st) கிழக்கு பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று(23) பிற்பகல் வேளையில் சரக்கு ரயிலொன்று பயணிகள் ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சமிக்ஞை கோளாறே விபத்திற்கான காரணமாகவிருக்கலாம் என ரயில்வே அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.