Colombo (News 1st) முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Lanka T10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 12 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடரில் 6 அணிகள் பங்கேற்கவுள்ளன.
பெண்களுக்கான T10 போட்டியொன்றையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.