INDIA: இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் பரவலடைந்து வருகிறது.
இன்று (16) இந்திய மத்திய சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள தரவுகளின் படி, ஒரே நாளில் புதிதாக 339 பேருக்கு COVID-19 தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,33,311 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,50,04,481 ஆக உயர்ந்துள்ளது.
4,44,69,678 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
இதன்படி, மீட்பு விகிதம் 98.81% ஆகவும் இறப்பு விகிதம் 1.19% ஆகவும் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 220.67 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
You must be logged in to post a comment.