Sangathy
News

நாடளாவிய ரீதியில் இன்று விசேட சுற்றிவளைப்பு!

போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைய, இன்று (17) அதிகாலை முதல் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று முதல் எதிர்வரும், 7 நாட்களுக்கு தொடர்ச்சியாக குறித்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதற்காக நாடளாவிய ரீதியில் காவல்துறை, விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சுற்றிவளைப்புகளின் மேலதிக கண்காணிப்புகளுக்காக, 09 பிரதி காவல்துறை மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

Afghanistan: Spike in kidnapping, murder cases worries Balkh residents

Lincoln

உயர்தரப் பரீட்சை தொடர்பாக வெளியான புதிய அறிவிப்பு!

Lincoln

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் Yuan Jiajun 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy