Colombo (News 1st) கிழக்கு மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வௌ்ள நிலைமை காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் H.E.M.W.G. திசாநாயக்க தெரிவித்தார்.
அதற்கிணங்க, மட்டக்களப்பு மத்தி, கல்முனை, அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர சம்மாந்துறை கல்வி வலயத்தில், வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மாத்திரம் மூடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment.