Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் குறைவடைந்திருந்த காற்றின் தரமானது, இன்று(18) வழமைக்கு திரும்பும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு மற்றும் காலியை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு காற்றின் தரம் குறைவடைந்திருந்தது.
நேற்று(17) கொழும்பின் வளிமாசுபாட்டு தரக்குறியீடு 100 வரை அதிகரித்ததாகவும் ஏனைய பகுதிகளில் வளிமாசுபாட்டு தரக்குறியீடு 50 முதல் 100 புள்ளிகளுக்கிடையே பதிவானதாகவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
You must be logged in to post a comment.