Sangathy
News

அரச தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

Colombo (News 1st) அரச தாதியர் அதிகாரிகள் சங்கத்தினரால் நேற்று(17) காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று(18)  காலை 07 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதனிடையே, வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் விசேட கலந்துரையாடல் இன்று(18) இடம்பெறவுள்ளது.

இந்த சம்மேளனத்தில் 72 தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டிய தெரிவித்தார்.

Related posts

Belarus, Lanka discuss ways to promote business contacts

Lincoln

மின் கட்டண குறைப்பு தொடர்பான பிரேரணையை மீளாய்வு செய்து சமர்ப்பிக்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவிப்பு

John David

சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான அறிக்கை நிதி அமைச்சின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy