Sangathy
News

சுதந்திர தின ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் பகுதியை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம்

Colombo (News 1st) சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு இன்று(30) முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை காலி முகத்திடல் பகுதியை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, காலை 6.00 மணி முதல் 8.30 வரையிலும் காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.30 வரையிலும் இந்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹப்புகொட தெரிவித்தார்.

எதிர்வரும் 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

ETI விவகாரம்: மத்திய வங்கியின் நாணய சபை பணிப்பாளர்களாக செயற்பட்டவர்களை பிரதிவாதிகளாக பெயரிடுமாறு உத்தரவு

John David

Significant risks in investing in cryptocurrency – CB

Lincoln

டயானா கமகே உள்ளிட்ட மூவரும் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதி

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy