Sangathy
Srilanka

கவர்னர்ஸ் கிண்ணத்தை தனதாக்கிய லோகேந்திரன் ரவிக்குமார்..!

நுவரெலியாவில் இடம்பெற்று வரும் ஏப்பிரல் வசந்தகால நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் “ரோயல் டேப்” கிளப்பினால் வருடாந்தம் நடத்தப்படும் கவர்னர்ஸ் கிண்ணத்திற்கான குதிரைப் பந்தயப் போட்டியில் நுவரெலியா ரேஸ்கோஸ் கிராமத்தை சேர்ந்த குதிரை ஓட்ட வீரர் லோகேந்திரன் ரவிக்குமார் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்று வரும் ஏப்பிரல் வசந்தகால கொண்டாட்டங்களில் குதிரை ஒட்ட பந்தைய போட்டி சிறப்பு அம்சத்தை கொண்டதாகும்.

உள் நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இவ்வருடத்திற்கான குதிரை ஒட்ட போட்டி நேற்று (14) காலை பத்து முப்பது மணிக்கு ஆரம்பமாகி மாலை ஒன்று முப்பது மணி வரை நடைபெற்றது.

இப்போட்டிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த குதிரைப் பந்தய வீரர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

அதேநேரம் இவ்வருடத்திற்கான உயரிய விருதான “கவர்னர்ஸ்” விருதுக்கான கிண்ணத்தை போட்டியில் முதலிடம் பெற்ற ரேஸ்கோர்ஸ் கிராமத்தை சேர்ந்த குதிரை ஓட்ட வீரர் லோகேந்திரன் ரவிக்குமார் தனதாக்கி கொண்டார்.

இவருக்காண கேடயம் மற்றும் பரிசுகளை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய நபர் கைது..!

tharshi

இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி..!

Lincoln

இனி யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் : பொலிஸார் அதிரடி தீர்மானம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy