ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரிய மனு மற்றும் அதன் இடைக்கால மனுக்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டுள்ளன.
அதன் மீதான தீர்ப்பு இன்று மதியம் 12.30 மணி அளவில் வௌியிடப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
