Sunday, September 22, 2024
Homeஇந்தியாவில் நாமலுக்கு அமோக வரவேற்பு உள்ளது : இந்திய அமைச்சர் கருத்து..!

இந்தியாவில் நாமலுக்கு அமோக வரவேற்பு உள்ளது : இந்திய அமைச்சர் கருத்து..!

ராஜபக்ஷவின் பாரம்பரியம் இந்தியாவை ‘குடும்பமாக’ ஏற்றுக்கொள்வதால், ஜனாதிபதி வேட்பாளராக நாமல் இணைந்தது வரவேற்கத்தக்கது என இந்தியாவின் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் பா.ஜ.க. உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் 21ஆம் திகதி நாமல் தனது முதலாவது ஜனாதிபதி பேரணியை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வடமாகாண பொதுஜன பெரமுனவின் அரசியல்துறை உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் விடுத்த அறிக்கைக்கு பதிலளித்த சுவாமி, மற்ற அண்டை நாடுகளின் தலைவர்களைப் போல் அல்லாமல் இந்தியாவில் நாமலுக்கு அமோக வரவேற்பு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை மகிந்த ராஜபக்ஷ முடிவுக்குக் கொண்டுவந்ததன் காரணமாக ராஜபக்ஷவின் குடும்பம் அதிகம் வரவேற்கப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments