Tuesday, September 24, 2024
Homeஹரின் - மனுஷ ஜனாதிபதி ஆலோசகர்களாக நியமனம்..!

ஹரின் – மனுஷ ஜனாதிபதி ஆலோசகர்களாக நியமனம்..!

முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, காணி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான ஆலோசகராக ஹரின் பெர்னாண்டோவும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசகராக மனுஷ நாணயக்காரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை உயர் நீதிமன்றம் இரத்துச் செய்ததையடுத்து அவர்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன்போதே இப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments