Friday, September 27, 2024
Homeமின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி..!

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி..!

நபர் ஒருவர் தனது வீட்டில் தண்ணீர் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த மின் கேபிளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தேகம, கொட்டகொட, மிட்டியதுவ வத்தையில் வசித்த நிஹால் சூரியராச்சி (67) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருடைய இரண்டு மகள்களும் வெளியூரில் வசிப்பதுடன், மனைவியும் மகள் வீட்டில் வசிப்பதால், தற்போது தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் சரியான நேரத்தில் உணவு எடுக்க வராததால், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ​​வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் அருகே கிடந்ததையும், உடலில் மின் ஒயர் அறுந்து கிடந்ததையும் கண்டனர்.

இந்நிலையில் குறித்த சடலத்தை மீட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments