கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்ட்ட, ஆலங்கேணி பிரதேசத்தையும் பைசல் நகர் பிரதேசத்தையும் இணைக்கின்ற பாலத்தடியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை(20) இரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா, மஹ்ரூப் நகர், 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான முஹம்மது லெப்பை முபாரக் (60 வயது) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்ட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
சம்பவ தினம் மாலை 5 மணியளவில் கடைக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு, சென்றவர் என ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரிய வந்திருப்பதாகவும், இரவு 7 மணியளவில் சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து, கிண்ணியாபொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.