இலங்கையில் வழங்கப்பட்ட முன்னைநாள் சாரதி அனுமதிப் பத்திரங்கள் மீண்டும் புதுப்பிக்கத் தேவையற்றவையாக காலவரையறை அற்றவையாக வழங்கப்பட்டு இருந்தன.
இவ்வாறு வழங்கப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில் அதிகரித்துச் செல்லும் விபத்துக்களைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இவ்வகையைச் சார்ந்த சுமார் 11 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.