இன்று முதல் நாடு முழுவதும் மழையுடனான நிலைமை குறைவடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எவ்வாறாயினும், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்;.
அத்துடன், இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.