பிரதான தொடருந்து மார்க்கத்தில் தொடருந்து சேவைகளில் தாமதமாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வல்பொல பகுதியில் தொடருந்து ஒன்று இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது.
பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தே இவ்வாறு இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே போக்குவரத்து தாமதமாகக் கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.