கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் பெரும் போராட்டம் – பெருந்திரளான மக்கள் பற்கேற்பு

வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணி யில் இன்று ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. இதில் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நெடுங்கேணி பஸ் நிலையம் முன்பாக இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பமாகியது. இதன்போது கிவுல் ஓயா திட்டத் துக்கு எதிராக மக்கள் கோஷங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாகக்கோஷங்களை எழுப்பியவாறு சென்றிருந்தனர். அங்கும் மக்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியதுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றையும் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக வழங்கியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான தமிழ் மக்கள் கலந்து கொண்டு அரசின் திட்டமிட்ட நில அபகரிப்பு எதிராகக் குரல் கொடுத்திருந்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பின்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார், சாந்தி சிறிஸ்கந்தராஜா, தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பேச்சாளர் துளசி, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் பங்கேற்றிருந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles