இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவ ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கிச் செல்வது அடையாளம் காணப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இது நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஒலிச்சத்தங்களை எழுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன் வான்பரப்பும் மூடப்பட்டுள்ளது.
ஈரான் ஏவுகணைகள் தாக்கலாமென்பதால் பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக இருக்குமாறு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர் .

















