ஈரான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக 60 நாட்கள் போரை நிறுத்த இரு தரப்புகளும் இணங்கியிருந்தன.
இந்நிலையிலேயே, அமெரிக்கா கடந்த 7ஆம்திகதி ஈரான் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. இவ்வாறானதொரு பின்னணியில்தான், அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஈரான் கோரிக்கை விடுத்ததாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
