மலேசியாவின் ஜோகூர்பாரு, தாமான் டாயா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட மோதல் காரணமாக, 15 வயது சிறுவன் உட்பட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜோகூர் மாநிலக் பொலிஸ் பொறுப்பதிகாரி கூறுகையில், இன்று அதிகாலை 5:40 மணியளவில் உணவகத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் குறித்துக் எமக்கு அவசரத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையில், இன்று காலை 10:00 மணி முதல் 11:00 மணிக்குள்ளாகத் தாமான் செத்தியா இண்டா பகுதியில் சந்தேக நபர்கள் 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேருக்கு ஏற்கனவே பல்வேறு குற்றப் பின்னணிகள் இருப்பது பொலிஸாரின் முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது என்று, ஜோகூர் மாநிலக் பொலிஸ் பொறுப்பதிகாரி அப்துல் ரஹ்மான் அர்சாத் கூறினார்.
ஸ்பெய்ன் மற்றும் அர்ஜென்ரீனா அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி உணவகத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட போது, ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி இந்த மோதல் வெடித்ததாக நம்பப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக 2 நிமிடம் 36 வினாடிகள் கொண்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இச்சம்பவம் குறித்துக் காவல் துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
