மஹர சிறைச்சாலை – கண்காணிப்புக்கு விமானப்படை ஹெலிக்கொப்டர், டிரோன்கள் களமிறக்கம்

மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை கண்காணித்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ஹெலிக்கொப்டர் மற்றும் ஆளில்லா விமானங்கள் (டிரோன்கள்) களமிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மஹர சிறைச்சாலை வளாகத்திலுள்ள கட்டடமொன்றில் இன்று (01) பிற்பகல் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைச்சாலையின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) மற்றும் விமானப்படையினர் இணைந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles