யாழ். இந்துக் கல்லூரி உயர்தர மாணவன் திடீர் மரணம்!

யாழில் உயர்தர மாணவன் ஒருவர் நேற்றுமுன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்போது யாழ். இந்துக் கல்லூரி மாணவனான அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சை எழுதும்போது மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின் சிகிச்சையின் பின் வீடு திரும்பினார். அதன்பின்னர் மீண்டும் 12 ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் சிகிச்சை பெற்றார்.

பின்னர் நேற்றுமுன்தினம் இரவு (16) உணவு அருந்திவிட்டு இருந்தவேளை வலிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது மரணம் சம்பந்தமான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி.அன்ரலா மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் போதும் குறித்த மரணத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles