இங்கிலாந்தில் பொலிஸ் கார் மற்றும் வாகனம் மோதி கொண்டதில் 7 பேர் உயிரிந்துள்ளனர்.
இங்கிலாந்தின் மிடில்ஸ்புரோ பகுதியருகே வோல்க்ஸ்வேகன் வாகனம் ஒன்றில் தவறான பாதையில் சிலர் பயணம் செய்துள்ளனர்.
இதனால், அவர்களை பொலிசார் காரில் துரத்தி உள்ளனர்.
இதனை கண்டதும் அந்த வாகனம் விரைவாக சென்றது. இதன் போது பொலிசாரின் கார், வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
சம்பவத்திற்கு ரெட்கார் தொகுதி எம்.பி.யான அன்னா டர்லே இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி விசாரணை நடந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
