Sangathy
News

சட்டவிரோத துப்பாக்கிகள், கைக்குண்டுகளை கைப்பற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான அன்பளிப்பு தொகையை அதிகரிக்க

Colombo (News 1st) சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை கைப்பற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆலோசனைக் கோவை ஒன்றினூடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விடயங்களை தௌிவுபடுத்தியுள்ளார்.

பொலிஸார் மற்றும் தனியார் உளவுப் பணியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று(25) முதல் எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி வரை கைப்பற்றப்படும் துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பில் இந்த சன்மானம் வழங்கப்படவுள்ளது.

Related posts

பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நியமனம்

Lincoln

கொழும்பின் சில பகுதிகளில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை

Lincoln

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் – எச்சரிக்கின்றார் ஜனாதிபதி ரணில்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy