Sangathy
News

உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்: விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம்(CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கமைய இந்த விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து நேற்றிரவு(17) 10.30 அளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்திலிருந்து இறங்கிய சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Related posts

யாழ். பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவரிடம் விசாரணை!

Lincoln

President instructs to finish the Minipe Left Bank Canal Rehabilitation Project (MLBCRP) work before the upcoming Maha Season

Lincoln

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய விசேட தேடுதல் நடவடிக்கை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy