அமரர் சிவகுருநாதர் இராமச்சந்திரா
பிறப்பு05 FEB 1938,இறப்பு27 SEP 2020
ஓய்வுநிலை Ceylon Tobacoo Company உத்தியோகத்தர், சப்ரா, உதயன் பத்திரிக்கை நிறுவன ஊழியர், சமாதான நீதவான்
வயது 82
வட்டுக்கோட்டை, Sri Lanka (பிறந்த இடம்)
யாழ். வட்டுக்கோட்டை மூளாய்வீதி விளாத்தித் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவகுருநாதர் இராமச்சந்திரா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்றாயினும் ஆறாது எம் துயரங்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்!
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து நிற்கின்றோம்!!
ஆயிரம் பேர் ஆறுதலில் ஆறினாலும்
உங்கள் பிரிவை நெஞ்சம் மறுக்குதப்பா!
நேற்றுப் போல் இருக்கின்றது
நாங்கள் வாழ்ந்த இன்ப வாழ்க்கை நினைவுகள்
யார் கண் பட்டதோஎங்கள் குருவிக்கூடு கலைந்தது!
அன்பிற்கே சாவு என்றால் அகிலமே தாங்காதப்பா!
என்னுயிர் அப்பா வந்து விடுங்கோ!
ஏங்கி நாம் தவிக்கின்றோம்
இந்த மண்ணில் உம்மைப் போல் யார் வருவார்?
எம் துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்