Sangathy
NewsWorld Politics

பிலிப்பைன்ஸில் புதிய உச்சத்தை எட்டிய அரிசி விலை…!

பிலிப்பைன்ஸில் சமீப காலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த டிசம்பருடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் உயர்ந்து 22.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதனால் அரிசி விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அரசின் கையிருப்பிலுள்ள அரிசியை சட்ட விரோதமாக விற்பனை செய்ததே இதற்கு காரணமென குற்றம் சாட்டப்படுகிறது.

இதற்கிடையே அரிசி விலையை குறைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். எனவே விவசாய துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டது.

இந்நிலையில், அரிசி விற்பனை ஊழல் தொடர்பாக தேசிய உணவு ஆணையத்தின் தலைவர், அதிகாரிகள் உட்பட 138 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் பிரான்சிஸ்கோ டியு லாரல் கூறினார்.

Related posts

உலக வங்கியின் அனுசரணையில் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை

Lincoln

நீதிபதி T. சரவணராஜா இராஜினாமா: பக்கசார்பற்ற விசாரணை அவசியம் என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

Lincoln

GMOF: Specialists hogging posts in Colombo at the expense of young docs

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy