Sangathy
Srilanka

மின்னல் தாக்கி அண்ணன், தங்கை உயிரிழப்பு..!

நாட்டில் நேற்று பெய்த கன மழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் இரத்தோட்டை வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (29) மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெல்காலயாய , இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எனக்கு வாக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை – போதைப்பொளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் : சஜித்..!

tharshi

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் – சார்ஜன்ட் ஒருவர் கைது..!

tharshi

ஏப்ரல் 12 தபால் ஊழியர்களுக்கு வேலை..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy