Sangathy
Cinema World

தக்லைப் படப்பிடிப்பு : மணிரத்னத்திற்கு ஷாக் கொடுத்த கமல்..!

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது கமல் செய்த விஷயம் மணிரத்னத்தை ஷாக்காகி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் கமலை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு வந்தது. அதற்கு முன்பு நான்கு ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த கமல் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விறுவிறுப்பாக படங்களில் நடிக்க கமிட்டாகி வருகின்றார்.

அந்த வகையில் ஷங்கரின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார் கமல். 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்படம் பல காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு கமலின் முயற்சியினால் இப்படம் மீண்டும் துவங்கப்பட்டு தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஜூன் மாதம் இப்படம் திரையில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைப் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கமல். நாயகன் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி தக்லைப் மூலம் மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமலுடன் இப்படத்தில் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சிம்பு என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

முதலில் இப்படத்திலிருந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் விலகியதாக தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது ஜெயம் ரவி மற்றும் துல்கர் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதில் எது உண்மை என தெரியவில்லை. ஆனால் சிம்பு இப்படத்தில் நடிக்கின்றார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. சமீபத்தில் சிம்பு தக்லைப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் தேர்தல் வேலைகள் முடிவடைந்து கமல் தற்போது தக்லைப் படத்தில் இணையவுள்ளார். இந்நிலையில் கமல் செய்த ஒரு விஷயம் மணிரத்னத்தை டோட்டலாக ஷாக்காகி இருக்கின்றதாம். அதாவது மணிரத்னம் கமலுக்கு போன் செய்து தக்லைப் ஷூட்டிங் பற்றி கூறியிருக்கின்றார். அதற்கு கமல் தான் இரண்டு நாட்களில் ஷூட்டிங்கில் கலந்துகொள்வேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து இரண்டு நாட்கள் கழித்து கமல் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஒரு பாடலுடன் சென்றிருக்கின்றார். படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை கமல் எழுதுவதாக இருந்துள்ளது. அந்த பாடலை இரண்டே நாட்களில் கமல் எழுதியுள்ளார். அதுவும் மணிரத்னம் எதிர்பார்த்த வகையில் அப்பாடல் அமைந்திருக்கின்றதாம். இதை சற்றும் எதிர்பாராத மணிரத்னம் டோட்டலாக ஷாக்காகி இருக்கின்றார்.

மேலும் இப்பாடலை ஏ.ஆர் ரஹ்மான் இசையில் கமலே பாடவும் இருக்கிறாராம். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை இந்தாண்டு இறுதிக்குள் முடித்துவிட்டு அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படத்தை வெளியிட கமல் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

கங்குவா படத்தின் மிரட்டலான டீசர் வெளியீடு (VIDEO)

Lincoln

சிம்பிளாக நடந்து முடிந்த விவேக் மகள் தேஜஸ்வினியின் திருமணம்..!

tharshi

கருங்காலி மாலை மீது நம்பிக்கை இல்ல – அவருக்காக மட்டுமே அணிகிறேன் : லோகேஷ் கனகராஜ்

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy