Sangathy
Srilanka

டயானாவை கைது செய்ய ஆலோசனை..!

இலங்கை பிரஜாவுரிமை வைத்திருந்ததாக தவறான தகவலை கூறியமை, விசா அனுமதியில்லாமல் நாட்டில் தங்கியிருந்தமை, தவறான தகவல்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டமை உட்பட்ட காரணங்களை முன்வைத்து முன்னாள் எம்.பி டயானா கமகேவை கைது செய்வதற்கான ஆலோசனைகள் நடத்தப்படுவதாக அறிய முடிகின்றது.

டயானா கமகேவுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பின் பிரதி உத்தியோகபூர்வமாக கிடைத்த பின்னர், அது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் முறையிட குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தயாராகி வருவதாக அறியமுடிந்தது.

இதேவேளை நீதிமன்ற தீர்ப்புக்கமைய, இதுவரைகாலம் டயானா கமகே பெற்ற எம்.பிக்கான ஊதியம் , இராஜாங்க அமைச்சருக்கான ஊதியம் ,கொடுப்பனவுகளை அவரிடமிருந்து அறவிடவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Related posts

500 ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸூக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!

tharshi

சீமெந்தின் விலை குறைப்பு..!

tharshi

யாழில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy