மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, கடலில் மிதந்த போத்தலில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்த 5 மீனவர்கள் உயிரிழந்தனர்.
தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்புக்கு கடந்த 6 ஆம் திகதி 6 மீனவர்களுடன் சென்ற ‘Devon 5’ மீன்பிடிக் கப்பலில் பயணித்த 5 மீனவர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.
அதன் பிறகு அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கப்பலில் பயணித்த 42 வயதான நயன காந்த, 24 வயதான பதும் டில்ஷான், 32 வயதான சுஜித் சஞ்சீவ, 33 வயதான பிரதீப் நிஷாந்த மற்றும் 68 வயதான அஜித் குமார ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்துவதற்கு முன், போத்தலுடன் உயிரிழந்த மீனவர்களும், தற்போது ஆபத்தான நிலையில் உள்ள மீனவர்களும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.