Sangathy
News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் பக்கச்சார்பின்றி முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்ட நடவடிக்கைககளை எவ்வித தலையீடுகளும் இன்றி சுயாதீனமாகவும் பக்கச்சார்பற்றதாகவும் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க தேவையான பின்னணி அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இன, மத, கட்சி அல்லது நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இலங்கை மக்கள் அனைவரினதும் அபிலாஷைகளை நனவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய அரசியல் இலக்குகளிலிருந்தும் பின்தங்கிய போக்குகளிலிருந்தும் விலகி நாட்டைக் கட்டியெழுப்பும் பொது வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்ப்பதே இன்றைய தேவையென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Related posts

மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்க்கவும் – மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

Lincoln

உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை புறக்கணித்து நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்ற முடியாது: மனித உரிமைகள் ஆணைக்குழு சபாநாயகருக்கு அறிவிப்பு

John David

Parents urged to keep children hydrated

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy