India: மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி (89) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (02) காலமானார்.
மகாத்மா காந்தியின் மகனான மணிலால் காந்தி மற்றும் சுசீலா மஷ்ருவாலா ஆகியோருக்கு அருண் காந்தி ஏப்ரல் 14, 1934 இல் பிறந்தார்.
இவர் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் வசித்து வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இவர் எழுத்தாளரும் அரசியல் ஆர்வலரும் ஆவார்.
இவரது இறுதிச்சடங்கு இன்று மாலை கோலாப்பூரில் நடைபெறும் என்று அருண் காந்தியின் மகன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.