Sangathy
News

மட்டக்குளி – சீமாமாலகய தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Colombo (News 1st) 145ஆம் இலக்க வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் மட்டக்குளிய – சீமாமாலகய மார்க்க பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும்(26) தொடர்கின்றது.

155 ஆம் இலக்க வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் மட்டக்குளிய – சொய்சாபுர மற்றும் 260 ஆம் இலக்க வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் ஹெந்தலை – புறக்கோட்டை ஆகிய மார்க்கங்களை ஒன்றிணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று(25) ஆரம்பிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் இதுவரை எந்தவொரு அதிகாரிகளும் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பஸ் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பணிப்புறக்கணிப்பின் காரணமாக பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Related posts

விலை குறைப்பிற்கு இணங்காவிட்டால் கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் – வர்த்தக அமைச்சர்

Lincoln

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

Lincoln

STF nets four with firearm for underworld killing

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy