Sangathy
News

காலி சிறைச்சாலை கைதிகளை பார்வையிட மீண்டும் சந்தர்ப்பம்

Colombo (News 1st) காலி சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளிடையே காய்ச்சல் மற்றும் தோல் தொடர்பான தொற்று பரவியமையினால் கடந்த நாட்களில் கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

எவ்வாறாயினும், கைதிகளை வௌியில் அழைத்துச் செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் தவிர்க்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காலி சிறைச்சாலையில் கைதிகளிடையே காய்ச்சல் மற்றும் தோல் தொடர்பான தொற்று பரவியமையினால் 2 கைதிகள் உயிரிழந்ததுடன், 09 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நோய் தொற்று தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கூறினார்.

Related posts

மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் கட்டாயம் – கலால்வரி திணைக்களத்திற்கு பணிப்புரை

Lincoln

பாலியாறு பெருக்கெடுப்பு- மன்னாரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின

Lincoln

பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மலேசிய பிரதமருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy