Sangathy
News

957 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு

Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 957 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோபா குழுவில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 வருட கடமை விடுப்பு பெற்று வெளிநாடு செல்வதற்காகவே பெரும்பாலான வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பதவி விலகிய வைத்தியர்கள் பலர் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

Related posts

இடி, மழையுடனான வானிலை நிலவக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

John David

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் Yuan Jiajun 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்

Lincoln

New elephant census next year

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy