Sangathy
News

மலேசிய வௌிவிவகார அமைச்சர் நாளை (08) இலங்கை வருகிறார்

Colombo (News 1st) மலேசிய வௌிவிவகார அமைச்சர் சம்ப்ரி அப்துல் காதிர் (Zambry Abdul Kadir) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (08) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் சம்ப்ரி அப்துல் காதிர் கலந்துகொள்ளவுள்ளார்.

மலேசிய வௌிவிவகார அமைச்சருடன் அந்நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவும் நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

நாளை வருகை தரவுள்ள மலேசிய வௌிவிவகார அமைச்சர் தலைமையிலான இராஜதந்திரிகள் குழாம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ETI விவகாரம்: மத்திய வங்கியின் நாணய சபை பணிப்பாளர்களாக செயற்பட்டவர்களை பிரதிவாதிகளாக பெயரிடுமாறு உத்தரவு

John David

குடிநீர் பிரச்சினைகளை 117 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்க முடியும்

John David

World Cup 2022: Did it cross the line? Germany out as Japan and Spain progress

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy