Sangathy
News

இடி, மழையுடனான வானிலை நிலவக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும், காலி, கண்டி, மாத்தறை, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று(01) 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று(01) பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது.

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

Female local councillors less corrupt, more sensitive and law abiding – Chairman EC

Lincoln

Stable Genius

Lincoln

Colombo (News 1st) பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்தினை பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். குறித்த யுவதியின் மரணத்திற்கான உறுதியான காரணத்தை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் தற்போது வைத்தியசாலைக்கு சென்று தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும், சமோதி சந்தீபனி எனும் குறித்த யுவதிக்கு ஊசி மருந்து செலுத்தப்பட்ட நாளில் மேலும் 12 பேருக்கு அதே ஊசி மருந்து செலுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 2715 பேருக்கு இந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த ஊசி மருந்தானது 2013 ஆம் ஆண்டு முதல் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy