Colombo (News 1st) யாழ்ப்பாணம் – வடமராட்சி, மந்திகை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் – புலோலி வீதியில் நெல் உலரவைத்துக்கொண்டிருந்த நபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் நெல் உலரவைத்த நபர் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காயமடைந்துள்ளார்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
You must be logged in to post a comment.