Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் நாளை (17) மாலை 5 மணி முதல் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை (17) மாலை 05 மணி முதல் நாளை மறுதினம் (18) காலை 09 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அம்பத்தலை நீர் விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment.