Colombo (News 1st) இலங்கை கடற்படையின் புதிய பணிக்குழாம் பிரதானியாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, மாத்தளை சென். தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
அவர் 1987 இல் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் கெடட் அதிகாரியாக இணைந்தார்.
You must be logged in to post a comment.