Colombo (News 1st) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ சற்று முன்னர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 650 இலக்க விமானத்தில் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளை ஸ்திரப்படுத்துவதற்காகவே பசில் ராஜபக்ஸ நாட்டிற்கு வருவதாக, நியூஸ்ஃபெஸ்ட்டின் நியூஸ்லைன் நேர்காணலில் கலந்துகொண்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தார்.
You must be logged in to post a comment.